திசையன்விளை அருகே மனநிலை பாதிக்கப்பட்ட இளைஞர் கழுத்தை நெரித்துக்கொலை

 
murder

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே மனநிலை பாதித்த இளைஞரை கழுத்தை நெரித்துக் கொன்ற உறவினரை போலீசார் கைது செய்தனர்.

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள மிட்டாதார்குளம் கிராமத்தை சேர்ந்தவர் டேவிட் ஜீசஸ். இவரது மகன் டேவிட் ராஜ்(25). இவர் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது. அதே பகுதியில் டேவிட் ராஜின் அக்கா மரிய சோபா, கணவருடன் வசித்து வசித்து வருகிறார். இந்த நிலையில், நேற்று டேவிட் ராஜ் தனது அக்கா மரியசோபாவிடம் சென்று ரூ.30 ஆயிரம் பணம் கேட்டு தகராறு செய்துள்ளார்.

nellai

ஆனால் அவர் கொடுக்க மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த டேவிட் ராஜ், அக்காவின் உடைகளை தீவைத்து எரித்துள்ளார். இதனை கண்ட மரியசோபாவின் மகன் பிரிட்டோ, டேவிட் ராஜை மரத்தில் கட்டிவைத்து தாக்கியதுடன், அவரது உடலில் மின்சாரத்தை பாய்ச்சியதாக கூறப்படுகிறது. பின்னர், ஒயரினால் அவரது கழுத்தை நெரித்து கொலை செய்தார்.

தகவல் அறிந்த திசையன்விளை போலீசார், கொலையான டேவிட்ராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து பிரிட்டோவை கைது செய்தனர்.