திருமயம் அருகே கிணற்றில் தவறி விழுந்து பள்ளி மாணவர் பலி

 
drowned

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே கிணற்றில் தவறி விழுந்து 10ஆம் வகுப்பு மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள லெம்பலகுடி தண்ணீர்பள்ளம் பகுதியை சேர்ந்தவர் முத்தையா. விவசாயி. இவரது மகன் கருப்பையா(16). இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், நேற்று மதியம் கருப்பையா டீ குடித்துவிட்டு, டம்ளரை கழுவுவதற்காக வீட்டின் அருகில் உள்ள கிணற்றில் இறங்கி உள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக கிணற்றில் தவறி விழுந்த அவர், நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கினார்.

pudukottai

இதனிடையே கருப்பையாவை நீண்ட நேரமாக காணாததால் சந்தேகமடைந்த அவரது பெற்றோர், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கிணற்றில் இறங்கி தேடினர். அப்போது, கருப்பையா உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். தகவலின் பேரில் நமணசமுத்திரம் போலீசார், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருமயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.