மேட்டூர் அருகே காவிரி ஆற்றில் மூழ்கி தனியார் நிறுவன ஊழியர் பலி!

 
drowned

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே காவிரி ஆற்றில் குளித்த தனியார் நிறுவன ஊழியர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள வீரவனூர் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி. இவரது மகன் மாயக்கண்ணன்(24). இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில், நேற்று விடுமுறையில் வீட்டில் இருந்த மாயகண்ணன் அருகில் உள்ள காவிரி ஆற்றுக்கு குளிக்க சென்றுள்ளார். ஆற்றில் இறங்கி குளித்துக்கொண்டிருந்த அவர் கிழக்கு கரையில் இருந்து மேற்கு கரைக்கு நீந்தி சென்றுள்ளார். மேற்கு கரையின் அருகே சென்றபோது எதிர்பாராத விதமாக அவர் தண்ணீரில் மூழ்கினார்.

mettur

இதனை கண்டு அருகில் உள்ளவர்ள் மேட்டூர் தீயணைப்புத்துறையினர் மற்றும் கமலைக்கூடல் போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் ஆற்றில் இறங்கி தேடினர். அப்போது, மாயக்கண்ணன் இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இதனை அடுத்து, போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.