நெல்லை அருகே மூதாட்டி கழுத்தை நெரித்துக்கொலை

 
dead body

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே 90 வயது மூதாட்டி கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அடுத்துள்ள திருவம்பலாபுரம் பகுதியை சேர்ந்தவர் மாடசாமி. தொழிலாளி. இவரது தாயார் வள்ளியம்மாள்(90). கடந்த 4ஆம் தேதி வீட்டில் இருந்த மூதாட்டி திடீரென மாயமாகினார். இதனால் குடும்பத்தினர் அவரை பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். இந்த நிலையில், நேற்று திருவம்பலாபுரம் வடக்கு தெருவில் உள்ள வீட்டின் திண்ணையில் மூதாட்டி கயிற்றால் கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

nellai

இதுகுறித்து தகவல் அறிந்த மாடசாமி கூடங்குளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கன்னியாகுமரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகின்றனர். மூதாட்டி கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.