திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேகம்!
Oct 21, 2021, 10:55 IST1634793915415
ஐப்பசி மாத பவுர்ணமியை ஒட்டி நேற்று திருவண்ணாமலை அருணச்சலேஸ்வரர் கோவிலில் 100 கிலோ அரிசியால் சாதம் செய்து அன்னாபிஷேகம் நடைபெற்றது.
ஐப்பசி மாத பவுர்ணமியை ஒட்டி, புகழ்பெற்ற திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் நேற்று பிற்பகல் அன்னாபிஷேகம் நடைபெற்றது. இதனையொட்டி, மூலவர் அருணாச்சலேஸ்வரர், கல்யாண சுந்தரேஸ்வரர் சுவாமிகளுக்கு 100 கிலோ அரிசியால் சாதம் செய்து, அன்னாபிஷேகம் செய்யப்பட்டது.
நேற்று மாலை 3 மணிக்கு தொடங்கி 6 மணி வரை நடைபெற்ற இந்த அன்னாபிஷேகத்தின்போது பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட வில்லை. அதனை தொடர்ந்து, மாலை 6 மணிக்கு மேல் திரளான பக்தர்கள் வந்திருந்து சுவாமியை தரிசித்து சென்றனர்.