நாமக்கல்லில் ஆயுதப்படை காவலர் தூக்கிட்டு தற்கொலை!
நாமக்கல் அருகே குடும்ப தகராறில் ஆயுதப்படை காவலர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நாமக்கல் அருகே உள்ள செல்லம்பட்டி பகுதியை சேர்ந்தவர் இளையராஜா(37). இவர் நாமக்கல் மாவட்ட ஆயுதப்படையில் காவலராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி பிரியதர்ஷினி. இவர் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இத்தம்பதிக்கு பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில், காவலர் இளையராஜா அடிக்கடி வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனை பிரியதர்ஷினி கண்டித்ததால், கணவன் - மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மனமுடைந்த இளையராஜா நேற்று காலை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலின் பேரில் நல்லிபாளையம் போலீசார், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.