பாபர் மசூதி இடிப்பு தினம் - திருச்சி ரயில் நிலையத்தில் தீவிர சோதனை

 
பாபர்

பாபர் மசூதி இடிப்பு தினம் நாளை அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு திருச்சி ரயில் நிலையத்தில் ரயில்வே போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

நாடு முழுவதும் பாபர் மசூதி இடிப்பு தினம் நாளை அனுசரிக்கப்படுகிறது. இதனை ஒட்டி,  முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக  திருச்சி ரயில் நிலையம், பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் போலீசார் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. திருச்சி ரயில் நிலையத்தில் ரயில்வே போலீசார் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் இணைந்து ரயில் நிலைய வளாகம் முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

railway police

வெடி பொருட்கள் ஏதும் மறைத்து வைக்கப்பட்டு உள்ளதா? என கண்டறியும் விதமாக மோப்ப நாய் மற்றும் மெட்டில் டிடெக்டர் கருவிகளை கொண்டு பயணிகளின் உடைமைகள் மற்றும் பார்சல் அலுவலகத்தில் உள்ள பார்சல்களை பார்வையிட்டு ஆய்வுசெய்தனர். மேலும், திருச்சி மார்க்கமாக தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து ரயில்களிலும் பயணிகளின் உடைமைகளை ரயில்வே போலீசார் தீவிர சோதனை செய்தனர். அதேபோல், வெளி மாநிலங்களிலிருந்த ரயிலிருந்து திருச்சிக்கு வரும் பயணிகளை ரயில் நிலையம் முன்பு தீவிர சோதனை செய்தனர்.