திருமணமாகாத ஏக்கத்தில் வங்கி உதவி மேலாளர் தற்கொலை

 
dead body

மானாமதுரையில் திருமணமாகாத ஏக்கத்தில் தனியார் வஙகி உதவி மேலாளர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அடுத்த உடையகுளம் பகுதியில் வசித்து வருபவர் ராஜேந்திரன்.  இவரது மகன் தீபன்குமார்(30). இவர் தனியார் வங்கி ஒன்றில் உதவி  மேலாளராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு பெற்றோர் பல ஆண்டுகளாக திருமணத்திற்கு பெண் பார்த்து வந்துள்ளனர். ஆனால், பெண் அமைய வில்லை. தனக்கு பெண் கிடைக்காததால் தீபன்குமார் மனமுடைந்த நிலையில் காணப்பட்டு வந்துள்ளார்.

sivagangai

சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த அவர் விஷத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். மயங்கிய நிலையில் கிடந்த அவரை குடும்பத்தினர் மீட்டு மானாமதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர், மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி தீபன்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இநத சம்பவம் குறித்து தந்தை ராஜேந்திரன் அளித்த புகாரின் பேரில், மானாமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர.