மது அருந்துவதை உறவினர்கள் கண்டித்ததால், சிறுவன் தூக்கிட்டு தற்கொலை

 
 suicide

மதுரையில் மதுபோதையில் தகராறு செய்ததை உறவினர்கள் கண்டித்ததால் 17 வயது சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகெண்டார்.

மதுரை ஆனையூர் வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் வசித்து வருபவர் ஆரோக்கிய சீலி. இவருக்கு கார்த்திகேயன்(17) உள்பட 4 பிள்ளைகள் உள்ளனர். குடும்ப தகராறு காரணமாக ஆரோக்கிய சீலி, கணவர் சுரேஷை பிரிந்து குழந்தைகளுடன் தனியே வசித்து வருகிறார். சிறுவன் கார்த்திகேயனுக்கு மதுப்பழக்கம் இருந்து வந்துள்ளது. அவர் மது அருந்திவிட்டு அடிக்கடி வீட்டில் உள்ளவர்களுடன் தகராறு செய்து வந்துள்ளார். 

madurai

நேற்று முன்தினம் வழக்கம்போல் மதுபோதையில் வீட்டிற்கு வந்த கார்த்திகேயன், தனது தங்கையுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது, அவரை கண்டித்த தாய் ஆரோக்கிய சீலியை அவர் தாக்கியுள்ளார். இதனால், கார்த்திகேயனை உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் கண்டித்துள்ளனர். இதில் மனமுடைந்த சிறுவன் கார்த்திகேயன் நள்ளிரவில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 

அதிகாலை கண் விழித்த ஆரோக்கிய சீலி மகன் தூக்கில் தொங்குவதை கண்டு கதறி அழுதார். தகவலின் பேரில் கூடல்புதூர் போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து புகாரின் பேரில், கூடல்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.