விருதுநகர் அருகே மரத்தின் மீது கார் மோதி விபத்து - இருவர் பலி!

 
accident

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே சாலையில் சென்ற காரின் டயர் வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்து மரத்தின் மீது மோதியதில் இருவர் உயிரிழந்தனர். 

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள பாலவநத்தம் பகுதியை சேர்ந்தவர் பாரதி (30). இவர் தனது நண்பர்களான திண்க்கல்லை சேர்ந்த சண்முகசுதன் (32), பால்ராஜ் (61) ஆகியோருடன், ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் உள்ள குல தெய்வ கோவிலுக்கு சென்றிருந்தார். சாமி தரினம் முடிந்து 3 பேரும் காரில் பாலவநத்தத்திற்கு திரும்பி கொண்டிருந்தனர். காரை பால்ராஜ் ஓட்டிச்சென்றார். திருச்சுழி அடுத்த கத்தாளம்பட்டி அருகே சென்றபோது திடீரென காரின் டயர் வெடித்தது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் இருந்த புளிய மரத்தின் மீது மோதியது.

aruppukottai

இந்த விபத்தில் பாரதி, சண்முகசுதன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். பால்ராஜ் பலத்த காயமடைந்தார். அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ம.ரெட்டியப்பட்டி போலீசார், பலியான 2  பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.