ஆண்டிப்பட்டி அருகே கடன் தொல்லையால் திமுக பிரமுகர் தற்கொலை!

 
dead body

ஆண்டிப்பட்டி அடுத்த கடமலைக்குண்டு அருகே கடன் தொல்லையால் திமுக நிர்வாகி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தேனி மாவட்டம் கடமலைக்குண்டு அருகே உள்ள தெய்வேந்திரபுரம் பகுதியை சேர்ந்தவர் ராசு மகன் முருகன்(38). இவர் திமுக ஒன்றிய கிளை செயலாளராக உள்ளார். இவருக்கு கவிதா என்ற மனைவியும், பிள்ளைகளும் உள்ளனர். இந்த நிலையில் முருகன், குமணன்தொழு பகுதியில் டாஸ்மாக் பார் நடத்தி வந்தார். தொழில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக கடந்த சில மாதங்களாக அவர் பார் ஏலத்தொகையை கட்டவில்லை. இதனால் பாருக்கு போலீசார் சீல் வைத்துள்ளனர். மேலும், அவருக்கு கடன் பிரச்சினை இருந்து வந்துள்ளது.

theni

இதனால் மனமுடைந்து காணப்பட்ட முருகன், நேற்று தனது வீட்டின் பின்புறம் உள்ள மரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த மயிலாடும்பாறை போலீசார், முருகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து முருகனின் மனைவி கவிதா அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.