கோவையில் ஓட்டுநரின் தலையில் கல்லைப்போட்டு படுகொலை - மர்மநபர்கள் வெறிச்செயல்!

 
murder

கோவை எம்.ஜி.ஆர் மார்க்கெட்டில் கடை முன்பு படுத்து தூங்கிய ஓட்டுநரின் தலையில், மர்மநபர்கள் கல்லைப்போட்டு கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை சாய்பாபா காலனி அருகே செயல்பட்டு வரும் எம்.ஜி.ஆர். மொத்த காய்கறி மார்க்கெட்டில் ஏராளமான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் வேலை முடிந்ததும் அங்குள்ள கடைகள் முன்பாக படுத்து தூங்குவது வழக்கம். இங்கு ஓட்டுநராக பணிபுரிந்த வரும் சண்முகம் (50.) என்பவர் நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து அங்குள்ள டைல்ஸ் கடைக்கு முன்பு படுத்து தூங்கி கொண்டிருந்தார்.

police

நள்ளிரவில் மர்மநபர்கள் சிலர், அவரது தலையில் கல்லைப் போட்டு படுகொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர். இன்று அதிகாலை கடை முன்பு சண்முகம் ரத்த வெள்ளத்தில் கிடப்பதை கண்ட பொதுமக்கள், இதுகுறித்து சாய்பாபா காலனி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.  அதன் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடரந்து, இந்த சம்பவம் குறித்து புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து, கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும்,அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர். எம்.ஜி.ஆர். மார்க்கெட்டில் தொழிலாளி தலையில் கல்லைப்போட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.