சொத்து தகராறில் முதியவர் அடித்துக் கொலை - பேரன் வெறிச்செயல்

 
murder

அரியலூர் அருகே சொத்து தகராறில் தாத்தாவை உருட்டு கட்டையால் அடித்துக்கொன்றுவிட்டு தப்பியோடிய பேரனை போலீசார் தேடி வருகின்றனர்.

அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டி அடுத்த காடுவெட்டான்குறிச்சி பகுதியை சேரந்தவர் அய்யாவு (88). விவசாயி. இவரது மகளின் மகன் குமார் (36). இவர் தாத்தாவின் சொத்தில் தனக்கு பங்கு கேட்டு நீண்ட நாட்களாக தகராறு செய்து வந்துள்ளார். அவரை குடும்பத்தினர் சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளனர். இந்த நிலையில், நேற்று காலை தாத்தா அய்யாவின் வீட்டிற்கு சென்ற குமார், அவரிடம் சொத்துக்களை தனது பெயருக்கு உடனடியாக எழுதித்தர கோரிக் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

ariyalur

அப்போது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறி உள்ளது. இதில் ஆத்திரமடைந்த குமார் அருகில் கிடந்த உருட்டு கட்டையை எடுத்து அய்யாவுவை சரமாரியாக தாக்கினார். இதில் தலையில் பலத்த காமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் அங்கிருந்து குமார் தப்பியோடினார. தகவலின் பேரில் உடையார்பாளையம் போலீசார்,  அய்யாவுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், இந்த கொலை சம்பவம் குறித்து வழக்குபபதிவு செய்து தப்பியோடிய குமாரை தேடி வருகின்றனர்.