தருமபுரியில் ராபி பருவ பயிர்களுக்கு காப்பீட்டு கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு!

 
paddy farm

தருமபுரி மாவட்டத்தில் ராபி பருவ பயிர்களுக்கு காப்பீட்டு கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளதாக, மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், திருத்தப்பட்ட பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் கடன் பெறும் மற்றும் கடன் பெறா விவசாயிகள் அவர்கள் விருப்பத்தின்  பெயரில் பதிவு செய்ய அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. தருமபுரி மாவட்டத்தில் இராபி பருவ பயிர்களுக்கு அறிவிக்கை செய்யப்பட்ட காப்பீட்டு கட்டணம் செலுத்துவதற்கான காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் கடன்பெறும் மற்றும் கடன் பெறா விவசாயிகள் இந்த மாவட்டத்தில் இத்திட்டத்தை செயல்படுத்தும் அக்ரிகல்ச்சர் இன்சூரன்ஸ் கம்பெனி ஆப் இந்தியா லிட் என்ற நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் மூலமாகவோ, பொது சேவைகள் மூலமாகவோ, வங்கிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலமாகவோ விருப்பத்தின் பெயரில் பதிவு செய்து கொள்ளலாம்.

dharmapuri collector

ஏக்கருக்கு  அதிகபட்ச இழப்பீடாக நெற் பயிருக்கு ரூ.34,750, மக்காச்சோளத்துக்கு ரூ.22,460, துவரைக்கு ரூ.13,265, நிலக்கடலைக்கு ரூ.19,650, பருத்திக்கு ரூ.11,600, கருப்பு பயிருக்கு ரூ.52,000, ராகிக்கு ரூ.9,775-ம் வழங்கப்படும். அதேபோல், மக்காச்சோளம், துவரை, நிலக்கடலை, பருத்தி, இராகி பயிர்களுக்கு 2021ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதியும், நெல் பயிருக்கு 2022ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் தேதியும், கரும்பு பயிருக்கு 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31ஆம் தேதியும் பயிர் காப்பீடு செய்ய இறுதி நாளாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

எனவே, விவசாயிகள் தங்கள் அருகாமையில் உள்ள மக்கள் மக்கள் கணினி மையத்தை அணுகி நெற்பயிருக்கு காப்பீடு கட்டணமாக ரூ.521.25, மக்காச்சோளத்திற்கு ரூ.336.9, துவரைக்கு ரூ.198.98, நிலக்கடலைக்கு ரூ.294.75, பருத்திக்கு ரூ.579.99, ராகிக்கு 146.63 மற்றும் கரும்புக்கு ரூ.2,600 செலுத்தி பயிர் காப்பீடு திட்டத்தில் பயன்பெறலாம். இவ்வாறு ஆட்சியர் திவ்யதர்ஷினி தெரிவித்துள்ளார்.