தென்காசி அருகே விவசாயி கிணற்றில் குதித்து தற்கொலை!

 
dead

தென்காசி அருகே கவனிக்க ஆள் இல்லாததால் விவசாயி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தென்காசி மாவட்டம் பனவடலிசத்திரம் அடுத்துள்ள உசிலங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்(46). விவசாயி. இவரது மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உடல் நல குறைவால் உயிரிழந்து விட்டார். இதனால் பாலகிருஷ்ணன் தனியே வசித்து வந்தார். இந்த நிலையில், கடந்த 10 நாட்களுக்கு முன்பு சாலையில் நடந்துசென்றபோது தவறி விழுந்ததில் பாலகிருஷ்ணனுக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.

tenkasi ttn

இதற்காக அவர் கட்டு கட்டிக்கொண்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். மேலும், தன்னை கவனிக்க யாரும் இல்லை என கூறி மனவேதனையில் இருந்து வந்துள்ளார். இதனால் வாழ்வில் விரக்தியடைந்த பாலகிருஷ்ணன் நேற்று வீட்டின் அருகில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந் அய்யாபுரம் போலீசார் மற்றும் சங்கரன்கோவில்  தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், இந்த சம்பவம் குறித்து அய்யாபுரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.