4 வயது மகளுக்கு பாலியல் தொல்லை அளித்த தந்தை போக்சோவில் கைது!
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த தந்தையை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அருகே உள்ள பெருமாள்மடை கிராமத்தை சேர்ந்தவர் கூலி தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 4 வயதில் ஒரு மகள் உள்ளார். இந்த நிலையில், குழந்தை வீட்டில் தனியாக இருந்தபோது, அவரது தந்தை பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்து அவரது மனைவி கண்டித்துள்ளார். அப்போது, மனைவியை சரமாரியாக தாக்கியதுடன், அவருக்கு கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்.
இதனை அடுத்து, பாதிக்கப்பட்ட பெண் கணவர் மீது திருவாடானை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், மகளிர் போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, சிறுமியின் தந்தையை கைது செய்தனர். தொடர்ந்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 4 வயது சிறுமிக்கு பெற்ற தந்தையே பாலியல் தொல்லை அளித்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.