மகள் இறந்த வேதனையில் தந்தை தற்கொலை... பெரம்பலூர் அருகே சோகம்!

 
poison

பெரம்பலூர் அருகே மகள் இறந்த வேதனையில் விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள பீல்பாடி பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ்(48). விவசாயி. இவரது மகள் ஷாலினி. இவர் குடும்ப தகராறு காரணமாக கடந்த 16ஆம் வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். மகளின் மீது அதிக அன்பு கொண்டிருந்த செல்வராஜ், அவர் தற்கொலை செய்து கொண்டதால் மனமுடைந்து காணப்பட்டு வந்தார். மேலும், வாழ்க்கையில் விரக்தியடைந்த அவர் நேற்று முன்தினம் வீட்டில் விஷத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

perambalur

மயங்கிய நிலையில் கிடந்த அவரை குடும்பத்தினர் மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி  செல்வராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். புகாரின் பேரில் மருவத்தூர் போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மகள் இறந்த வேதனையில் தந்தை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்கள் மற்றும் கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.