பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை... குளிர்பான கடை உரிமையாளர் உள்பட மூவர் கைது!

 
arrest

திருச்சி அருகே பெண் ஊழியரை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து மிரட்டிய குளிர்பான கடை உரிமையாளர் உள்ளிட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர். 

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் காட்டூர் பகுதியை சேர்ந்தவர் கவியரசன். இவர் அதே பகுதியில் குளிர்பான கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது கடையில், காட்டூரை சேர்ந்த 19 வயது பெண் ஒருவர் பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில், கவியரசன் அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து, அதனை தனது செல்போனில் வீடியோ எடுத்து மிரட்டி வந்துள்ளார். இதற்கு கவியரசனின் மனைவி சியாமளா மற்றும் அவரது கடையில் பணிபுரியும் மற்றொரு ஊழியரான நதியா ஆகியோரும் உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது.

sexual abuse

இந்த நிலையில், பாதிக்கப்பட்ட பெண் இந்த விவகாரம் குறித்து திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, கவியரசன் பெண் ஊழியரை பாலியல் வன்கொடுமை செய்து, வீடியோ எடுத்து மிரட்டியது உறுதியானது. இதனை அடுத்து, குளிர்பான கடை உரிமையாளர் கவியரசன், அவரது மனைவி சியாமளா மற்றும் கடை ஊழியர் நித்யா ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.