உவரி அருகே மீன்பிடி தொழிலாளி வெட்டிக்கொலை - போலீசார் விசாரணை!

 
Murder

திருநெல்வேலி மாவட்டம் உவரி அருகே முன்விரோதம் காரணமாக மீன்பிடி தொழிலாளி வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் உவரி அருகே உள்ள கூட்டப்பனை பகுதியை சேர்ந்தவர் சுடலைமாடன். இவரது மகன் சுபாஷ் என்கிற மணி(26). மீன்பிடி தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 பிள்ளைகள் உள்ளனர். அதே பகுதியை சேர்ந்தவர் டெல்வர் மகன் ராஜா(28). சுபாஷின் நண்பரான இவர், சமீபத்தில் அவரது மனைவி குறித்து அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக இருவருக்கும் இடையே பிரச்சினை இருந்து வந்துள்ளது.

nellai gh

இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு சுபாஷ், ராஜாவுடன் அங்குள்ள காட்டுப்பகுதிக்கு சென்று மது அருந்தியுள்ளார். அப்போது, அவர்களுக்குள் தகராறு ஏற்பட்ட நிலையில் ராஜா மற்றும் அவரது உறவினர்கள் சுபாஷை அரிவாளால் வெட்டிக்கொன்றுவிட்டு தப்பிச்சென்றனர். நேற்று காலை காட்டுப்பகுதியில் சுபாஷ் கொலை செய்யப்பட்டு கிடப்பத்தை கண்ட அந்த பகுதி பொதுமக்கள், உவரி போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து உவரி போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய ராஜா உள்ளிட்டோரை தீவிரமாக தேடி வருகின்றனர்.