தனியார் மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ முகாம்... பாஜக எம்எல்ஏ சரஸ்வதி தொடங்கிவைத்தார்!

 
modakurichi

ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறையில் இன்று தனியார் மருத்துவமனை சார்பில் நடைபெறும் இலவச மருத்துவ முகாமை, மொடக்குறிச்சி எம்எல்ஏ சரஸ்வதி தொடங்கி வைத்தார்.  

ஈரோடு சி.கே. மெடிக்கல் சென்டர் ஹாஸ்பிடல், ஈரோடு கேன்சர் சென்டர், ஈரோடு வாசன் கண் மருத்துவமனை மற்றும் விமலா பல் மருத்துவமனை இணைந்து நடத்தும் மாபெரும் இலவச மருத்துவ முகாம் இன்று அவல்பூந்துறை அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இந்த முகாமை மொடக்குறிச்சி தொகுதி பாஜக எம்எல்ஏ சி.சரஸ்வதி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர்.

ck saraswathi

இந்த முகாமில் சி.கே மெடிக்கல் சென்டரின் மருத்துவர்களான பொதுமருத்துவ நிபுணர் சிவக்குமார், பொது அறுவை சிகிச்சை நிபுணர் இரவிக்குமார், குழந்தைகள் நல மருத்துவ நிபுணர் சேதுபதி, மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவ நிபுணர் தமிழ்செல்வி, ஈரோடு கேன்சர் சென்டரின்  மருத்துவர்கள் வேலவன் மற்றும் மதுமிதா, வாசன் கண் மருத்துவமனை மருத்துவர்கள் விமலா, பல் மருத்துவமனையைச் சேர்ந்த பல் மருத்துவர் மகேஸ்வரி ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த முகாமிற்கு அவல்பூந்துறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டனர். 

அவர்களுக்கு இலவசமாக ரத்த அழுத்தம், ரத்த சர்க்கரை அளவு, உணவு முறை ஆலோசனை, மருத்துவ ஆலோசனை மற்றும் சிகிச்சைக்கு வந்த மக்களுக்கு மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டன. இந்த இலவச மருத்துவமுகாமில் முன்னாள் மொடக்குறிச்சி எம்எல்ஏ-க்கள் பாலகிருஷ்ணன், சிவசுப்பிரமணி, மொடக்குறிச்சி ஒன்றிய தலைவர் கணபதி, பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் என்.பி.பழனிசாமி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்