சாத்தூர் அம்மா உணவகத்தில் ஜெயலலிதா புகைப்படம் அகற்றம்... அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்!

 
amma canteen

சாத்தூரில் அம்மா உணவகத்தின் பெயர் பலகையில் இருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவப்படம் அகற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வடக்கு ரத வீதியில் அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது. இந்த உணவகத்தில்  பெயர் பலகையில் இருந்த ஜெயலலிதாவின் உருவப்படம் நீக்கப்பட்டிருந்தது. மேலும், உணவகத்தின் உள்ளே வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் படமும் மறைக்கப்பட்டு இருந்தது.இதுகுறித்து தகவல் அறிந்த அதிமுக சாத்தூர் நகர செயலாளர் இளங்கோவன் தலைமையில் அக்கட்சியினர் ஏராளமானோர் அம்மா உணவகம் முன்பு திரண்டனர். 

sattur

தொடர்ந்து, ஜெயலலிதாவின் புகைப்படம் நீக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், திமுக அரசை கண்டித்தும் அவர்கள் முழக்கங்களை எழுப்பினர். இதனை தொடர்ந்து, சாத்தூர் நகராட்சி ஆணையரை நேரில் சந்தித்து, ஜெயலலிதா புகைப்படம் நீக்கப்பட்டது தொடர்பாக புகார் அளித்தனர். மேலும், விரைந்து ஜெயலலிதாவின் உருவ படத்தை வைக்க வேண்டும் எனவும், அவ்வாறு செய்யாவிட்டால் பெரிய அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தெரிவித்தனர்.