வேலூர் அருகே தொழிலாளி கல்லால் தாக்கி கொலை - தம்பி கைது

 
dead body

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அருகே விவசாய தொழிலாளியை கல்லால் தாக்கி கொன்ற அவரது தம்பியை போலீசார் கைது செய்தனர்.

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அருகே உள்ள தேன்கனிமலை கிராமத்தை சேர்ந்தவர் சின்ன பொண்ணு. இவருக்கு சேகர் (35), சாமு என 2 மகன்கள் உள்ளனர். விவசாய தொழிலாளியான சேகருக்கு திருமணமாகி ராஜேஸ்வரி என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு  ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில், குடும்ப தகராறு காரணமாக ராஜேஸ்வரி கணவரை பிரிந்து, தனது பெற்றோர் வீட்டில் பிள்ளைகளுடன் வசித்து வருகிறார். இதனால் சேகர், தனது தாய் மற்றும் தம்பியுடன் வசித்து வந்தார். 

vellore gh

இந்த நிலையில், நேற்று முன்தினம் மதுபோதையில் வீட்டிற்கு வந்த சேகர், தாயார் சின்ன பொண்ணுவிடம் தகராறு செய்துள்ளார். இதனை அவரது தம்பி சாமு தட்டிக்கேட்டபோது, அவரை கத்தியால் தாக்க முயன்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சாமு, கல்லை எடுத்து சேகரை தாக்கினார். இதில் பலத்த காயமடைந்த சேகர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

 இதனை அடுத்து, நேற்று குடும்பத்தினர் அவரது உடலை தகனம் செய்ய முயன்றனர்.  இதனை அறிந்த கே.வி.குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சேகரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும்,இந்த கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிதவு செய்து, சாமுவை கைது செய்தனர்.