சத்தியமங்கலம் அருகே சலவை தொழிலாளிக்கு கத்தி குத்து... மனைவியுடன் பேசியதால் தொழிலாளி ஆத்திரம்!

 
Murder

சத்தியமங்கலம் அருகே மனைவியுடன் பேசிய சலவைத் தொழிலாளியை, இளைஞர் சரமாரியாக கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள உத்தாண்டியூர், அக்கரை தாத்தாபள்ளியை சேர்ந்தவர் ராஜேஷ்(32). சலவை தொழிலாளி. இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்த நிலையில், அதே ஊரை சேர்ந்த செல்வராஜ் என்பவரின் மனைவி உடன் ராஜேசுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம் தெரிந்து ராஜேஷையும், அவரது மனைவியையும் செல்வராஜ் கண்டித்துள்ளார். 

தொடர்ந்து, செல்வராஜ், தனது மனைவியை ஏளுரில் உள்ள அவரது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். இந்த நிலையில், ராஜேஷ் கடந்த 14ஆம் தேதி குட்டகத்தில் உள்ள கோவிலில் செல்வராஜின் மனைவியை தனியாக சந்தித்து, ராஜேஷ் பேசிக் கொண்டிருந்தார். இதனை கண்ட செல்வராஜின் மாமியார் சேவூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், விசாரணை நடத்திய போலீசார், இனிமேல் செல்வராஜ் மனைவியுடன் பேச மாட்டேன் என்று ரஜேஷிடம் எழுதி வாங்கி உள்ளனர்.

erode

இந்த நிலையில், நேற்று முன்தினம் மதியம் ராஜேஷ் மோட்டார் சைக்கிளில் மாகாளியம்மன்  கோயிலுக்கு வந்து கொண்டிருந்தார். அப்போது, அங்கு நின்றிருந்த செல்வராஜ், திடீரென ராஜேஷ் வந்த மோட்டார் சைக்கிளை எட்டி  உதைத்தார். இதில் ராஜேஷ் கீழே விழுந்த நிலையில், செல்வராஜ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ராஜேஷின் வலதுபக்க  கழுத்தில் குத்தினார்.

ராஜேஷின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அவரது அண்ணன், படுகாயமடைந்த ராஜேஷை மீட்டு சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த சம்பவம் குறித்து பவானிசாகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.