ஈரோட்டில் பிரபல திரை அரங்குக்கு சீல்வைத்த அதிகாரிகள்!

 
theater

ஈரோட்டில் உரிமத்தை புதுப்பிக்காமல் செயல்பட்ட பிரபல திரையரங்கை வருவாய் துறை அதிகாரிகள் அதிரடியாக பூட்டி சீல் வைத்தனர்.

ஈரோடு் இடையங்காட்டு வலசு பகுதியில் வி.எஸ்.பி என்ற திரையரங்கம் செயல்பட்டு வந்தது. இங்கு தமிழக அரசின் ஊரடங்கு தளர்வுகளுக்கு பிறகு புதிய திரைப்படங்கள் திரையிடப்பட்டு வந்தது.  இந்த நிலையில், ஆண்டுக்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டிய உரிமத்தை கடந்த 3 மாதங்களாக புதுப்பிக்காமல், புதிய திரைப்படங்களை திரையிட இருப்பதாக வருவாய் துறையினருக்கு தகவல் கிடைத்தது.

theater

அதன் அடிப்படையில், வருவாய் கோட்டாட்சியர் பிரேமலதா தலைமையில் வருவாய் துறையினர் வி.எஸ்.பி திரையரங்கிற்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினர்.  இந்த ஆய்வின்போது, திரையரங்குக்கான உரிமத்தை புதுப்பிக்காமல் இருப்பது தெரிய வந்தது. இதனை அடுத்து, படத்தை திரையிடும் அறைக்கு கோட்டாட்சியர் பிரேமலதா அதிரடியாக சீல் வைத்தார்.

மேலும், இந்த விவகாரம் தொடர்பாக திரையரங்க உரிமையாளரை எச்சரித்த அதிகாரிகள், உரிமத்தை புதுப்பித்த பிறகே திரைப்படங்களை திரையிட வேண்டும் என அறிவுறுத்தினார். உரிமத்தை புதுப்பிக்காததால் பிரபல திரையரங்குங்கு சீல் வைக்கப்பட்ட சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.