நத்தம் பேருந்து நிலையத்தில் அரசுப்பேருந்து மோதி மூதாட்டி பலி!

 
natham

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பேருந்து நிலையத்தில் அரசுப்பேருந்து மோதிய விபத்தில் மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார்.

திண்டுக்கல் மாவட்டம் கோபால்பட்டி அருகே உள்ள பாறைபட்டி கிராமத்தை சேர்ந்தவர் பிச்சையம்மாள்(55). இவர் நேற்று தனது மருமகளுடன் நத்தம் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது, நத்தத்தில் இருந்து முளையூர் சென்ற அரசுப்பேருந்து அங்கு நின்றிருந்த பிச்சையம்மாள் மோதியது. இதில், பேருந்தின் சக்கரத்தில் சிக்கி பிச்சையம்மாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

dead body

இதனை கண்டு அங்கி நின்றிருந்த பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தகவலின் பேரில் நத்தம் போலீசார், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில், விபத்து குறித்த பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.