காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் இளைஞர் தற்கொலை!

 
poison

தூத்துக்குடி அருகே காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் இளைஞர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை ஆறுமுக நகர் பகுதியை சேர்ந்தவர் சுந்தர்ராஜ். இவரது மகன் பேச்சிமுத்து. இவர் கோவையில் உள்ள பேக்கரி ஒன்றில் பணிபுரிந்து வந்தார். அப்போது, கடையில் பணிபுரிந்த பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். அந்த பெண்ணை திருமணம் செய்துகொள்வதாக பேச்சிமுத்து பெற்றோரிடம் தெரிவித்தபோது, அவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் பேச்சிமுத்து மனமுடைந்து காணப்பட்டு வந்துள்ளார். 

tuticorin

இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் ஊருக்கு வந்திருந்த பேச்சிமுத்து, நேற்று முன்தினம் அங்குள்ள கோவிலின் அருகே விஷத்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து வந்த கழுகுமலை போலிசார், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.