பெரியார் 48-வது நினைவு தினம் - திருச்சியில் அமைச்சர்கள் தலைமையில் திமுகவினர் மரியாதை!

 
periyar

தந்தை பெரியாரின் 48-வது நினைவு தினத்தையொட்டி, திருச்சியில் உள்ள அவரது உருவ சிலைக்கு அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தந்தை பெரியாரின் 48-வது நினைவு தினத்தையொட்டி திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள பெரியாரின் உருவ சிலைக்கு, திமுக முதன்மை செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு தலைமையில் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.இந்த நிகழ்ச்சியில், திருச்சி மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி, வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன், திமுக எம்எல்ஏ-க்கள் சௌந்தரபாண்டியன், பழனியாண்டி, முன்னாள் எம்எல்ஏ அன்பில் பெரியசாமி உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து  கொண்டனர்.

periyar

இதேபோல், திருச்சி மாவட்ட திமுக சார்பில் காட்டூர் பகுதியில் உள்ள பெரியாரின் உருவ சிலைக்கு, தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் கே.என்.சேகரன் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினர்.