ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் அம்பேத்கர் சிலை அமைக்க கோரி ஆட்சியரிடம் மனு!

 
ambethkar

ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவிவல் அம்பேத்கர் சிலை வைக்க வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தில் 28 அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் மனு அளித்தனர்.

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நேற்று 28  அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் திரண்டு வந்து கோரிக்கை மனு கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:- ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் பெரியார், அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரது சிலைகள் வைக்கப்பட்டு உள்ளன. இதேபோல், சட்டமேதை அம்பேத்கர் சிலையையும், பன்னீர்செல்வம் பூங்கா பகுதியில் வைக்க அனுமதி அளிக்க வேண்டும். இவ்வாறு  அவர்கள் அந்த மனுவில் கூறியிருந்தனர்.

ambethkar

முன்னதாக 28 அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் அம்பேத்கர் படத்தை கையில் ஏந்தியவடி, கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து பன்னீர்செல்வம் பூங்கா பகுதியில் அம்பேத்கர் சிலை வைக்க வேண்டும் என்று கோரி முழக்கங்களை எழுப்பினர். இதனால் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.