நெல்லையில் உடற் கல்வி ஆசிரியர் தூக்கிட்டு தற்கொலை!
நெல்லை பேட்டையில் உள்ள தனியார் கல்லூரி வாளகத்தில் உடற்கல்வி ஆசிரியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளனர்.
நெல்லை பேட்டை செந்தமிழ்நகரை சேர்ந்தவர் கொம்பன். இவரது மனைவி மாசானம். இவர்களது மகன் சுடலைமுத்து(29). இவர் பாளையங்கோட்டையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில், சுடலைமுத்துவின் தாயார் மாசானத்திற்கு மனநிலை பாதிப்பு உள்ளது. இதற்காக அவருக்கு பல்வேறு இடங்களில் சிகிச்சை அளித்தும் குணமடையவில்லை. மேலும், அவருக்கு திருமணம் தள்ளி சென்றதால் சுடலைமுத்து மன வேதனையில் இருந்து வந்துள்ளார்.
இந்த நிலையில், நேற்று காலை பேட்டை பகுதியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் சுடலைமுத்து தூக்கிட்ட நிலையில் சடலமாக தொங்கினார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பேட்டை போலீசார், சுடலைமுத்துவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.