சிவகங்கையில் இருசக்கர வாகனம் மீது கார் மோதல் - பிளஸ் 2 மாணவி பலி!

 
accident

சிவகங்கையில் இருசக்கர வாகனம் மீது கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் பிளஸ் 2 மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.

சிவகங்கை சாஸ்திரி நகரில் வசித்து வருபவர் மணிகண்டன். இவரது மகள் சுமித்ரா (17).  இவர் வாணியங்குடி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்தார். நேற்று மாலை பள்ளி முடிந்து இருசக்கர வாகனத்தில் சுமித்ரா வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார். மதுரை சாலையில் சென்றபோது இருசக்கர வாகனம் மீது எதிரே அதிவேகமாக வந்த கார் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானது. இதில், வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டதில் பலத்த காயமடைந்த சுமித்ரா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

sivagangai

தகவலின் பேரில் சிவகங்கை டவுன் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து தந்தை மணிகண்டன் அளித்த புகாரின் பேரில் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கார் ஓட்டுநர் சிலைமானை சேர்ந்த சுப்பிரமணி என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.