சிறுமிக்கு 3 ஆண்டுகளாக தொடர் பாலியல் தொல்லை... உறவினர் போக்சோ சட்டத்தில் கைது!

 
sexual abuse

தஞ்சையில் 15 வயது சிறுமிக்கு கடந்த 3 ஆண்டுகளாக தொடர் பாலியல் தொல்லை அளித்து வந்த உறவினரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

தஞ்சாவூர் நகர் மேட்டு எல்லையம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் 15 வயது சிறுமி. இவர் அங்குள்ள பள்ளி ஒன்றில் 10ஆம் வகுப்பு படித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர்(40). சிறுமியின் உறவினரான இவர், கடந்த 3 ஆண்டுகளாக சிறுமியை மிரட்டி பாலியல் தொல்லை அளித்து வந்துள்ளார்.  இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமி, தனது பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார். 

thanjavur

இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், சந்திரசேகர் மீது தஞ்சாவூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில், போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, சந்திரசேகர் சிறுமிக்கு கடந்த 3 ஆண்டுகளாக பாலியல் தொல்லை அளித்தது உறுதியானது. இதனை அடுத்து, அவரை போக்சோ சட்டத்தில் கைது செய்த போலீசார், பின்னர் சந்திரசேகரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.