பள்ளி மாணவியை கடத்தி பாலியல் தொல்லை... திருமணமான இளைஞர் கைது

 
rape

17 வயது பள்ளி மாணவியை கடத்தி பாலியல் தொல்லை அளித்த திருமணமான இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

கோவை மாவட்டத்தை சேர்ந்தவர் சிவகுமார்(24).இவருக்கு திருமணமாகி மனைவி கர்ப்பிணியாக உள்ளார். மேலும், அவர் பிரசவத்திற்காக தனது பெற்றோர் வீட்டிற்கு  சென்றுள்ளார். இதனால் வீட்டில் தனியாக இருந்த சதீஷுக்கு முகநூல் மூலம் ஊட்டியை சேர்ந்த 17 வயது பிளஸ் 2 மாணவி ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு உள்ளது.  நாளடைவில் இது காதலாக மாறியுள்ளது. இதனால், இருவரும் பல்வேறு இடங்களில் சுற்றித்திரிந்துள்ளனர். இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுமி வீட்டில்  இருந்து மாயமாகினார்.

arrest

இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர், ஊட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில், போலீசார் மாயமான சிறுமியை தேடி 
வந்தனர். மேலும், அவரது செல்போன் சிக்னலை வைத்து தேடியபோது அவர்கள் கோவையில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. இதனை அடுத்து, அங்கு சென்ற ஊட்டி போலீசார் சிறுமியை மீட்டு தனியார் காப்பகம் ஒன்றில் ஒப்படைத்தனர்.

மேலும், மாணவியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் சிவக்குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர். தொடர்ந்து அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.