திருச்சி காவிரி ஆற்றின் தடுப்பணையில் மூழ்கிய பள்ளி மாணவர்... தேடுதல் பணி தீவிரம்!

 
drowned

திருச்சி அருகே காவிரி ஆற்றின் தடுப்பணையில் குளித்தபோது தண்ணீரில் மூழ்கிய பள்ளி மாணவரை தேடும் பணி 2-வது நாளாக இன்று நடைபெற்று வருகிறது.

திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியை சேர்ந்தவர் அபு(16). இவர் தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். அரையாண்டு விடுமுறை காரணமாக வீட்டில் இருந்த அபு, நேற்று மாலை நண்பர்களுடன் கம்பரசம்பேட்டை பகுதியில் உள்ள காவிரி ஆற்றின் தடுப்பணைக்கு குளிக்க சென்றுள்ளார்.

நண்பர்களுடன் ஆற்றில் இறங்கி குளித்தபோது எதிர்பாராத விதமாக அபு தண்ணீரில் மூழ்கினார். இதனால் அதிர்ச்சியடைந்த நண்பர்கள் இதுகுறித்து உடனடியாக தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள், ஆற்றில் இறங்கி தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

river

தகவல் அறிந்த திருச்சி கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ இனிகோ இருதயராஜ், தேடுதல் பணியை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். நேற்று இரவாகியும் அபுவை மீட்க முடியாத நிலையில் தேடுதல் பணி நிறுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து, இன்று காலை முதல் மீண்டும் தேடுல் பணி நடைபெற்று வருகிறது.