டிவி பார்ப்பதை பெற்றோர் கண்டித்ததால், பள்ளி மாணவி தற்கொலை!

 
 suicide  suicide

நெல்லை அருகே அடிக்கடி டிவி பார்ப்பதை பெற்றோர் கண்டித்ததால் 8ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நெல்லை மாவட்டம் மானூர் அருகே உள்ள சங்கூத்து கிராமத்தை சேர்ந்தவர் செல்லத்துரை. இவரது மகள் சலோமி நிஷி(13). இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வந்தார். கொரோனா காரணமாக பள்ளிகள் திறக்காததால் மாணவி வீட்டில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில், படிப்பில் கவனம் செலுத்தாமல் எப்போதும் தொலைக்காட்சியில் பொழுது போக்கி வந்ததாக கூறப்படுகிறது.

nellai

இதனால் சலோமி நிஷியை, அவரது பெற்றோர் கண்டித்து உள்ளனர். இதனால் கடந்த சில நாட்களாக மனமுடைந்து காணப்பட்ட சலோமி நிஷி, நேற்று வீட்டில் தனியாக இருந்தபோது தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். வெளியே சென்றுவிட்டு வந்த பெற்றோர் மகள் தூக்கில் சடலமாக தொங்குவதை பார்த்து கதறி அழுதனர்.

தகவல் அறிந்த மானூர் போலீசார், மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து தந்தை செல்லதுரை அளித்த புகாரின் பேரில், மானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.