நாகர்கோவிலில் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை - பள்ளி மாணவர் கைது!
குமரி மாவட்டம் நாகர்காவிலில் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த 11ஆம் வகுப்பு மாணவரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைதுசெய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்காவில் ஆசாரிப்பள்ளம் பகுதியை சேர்ந்தவர் இளம்பெண். இவருக்கு 6 வயது மகள் உள்ளார். சம்பவத்தன்று இளம்பெண் வேலைக்கு புறப்பட்டு சென்ற நிலையில், வீட்டில் சிறுமி தனியாக இருந்துள்ளார். அப்போது, அதே பகுதியை சேர்ந்த 11ஆம் வகுப்பு படிக்கும் 16 வயது மாணவர், சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது. பின்னர் வேலை முடிந்து வீட்டிற்கு வந்த தாயிடம், சிறுமி தனக்கு நடந்த கொடுமையை கூறி அழுதுள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாய், நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், போலீசார் மாணவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர். தொடர்ந்து, அவரை நெல்லை சிறுவர் சீர்திருத்தப்பள்ளிக்கு அனுப்பிவைத்தனர்.