பிளஸ் 2 மாணவிக்கு பாலியல் தொல்லை... ஓய்வுபெற்ற ராணுவ வீரர் போக்சோவில் கைது!

 
sexual abuse

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் பிளஸ் 2 மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த ஓய்வுபெற்ற ராணுவ வீரர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் இந்திரா நகரில் வசித்து வருபவர் சேகர். ஓய்வுபெற்ற ராணுவ வீரரான இவர், தமிழக அரசின் சுகாதாரத் துறையில் கார் ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார். தொடர்ந்து, கடந்த சில மாதங்களுக்கு முன்பு பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றார். இந்த நிலையில், சேகர் அதே பகுதியை சேர்ந்த 17 வயது பிளஸ் 2 மாணவியுடன் பழகி வந்துள்ளார். இந்த நிலையில், அவரை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி, பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதில் அந்த மாணவி கர்ப்பமானார். 

arrested

இதுகுறித்து மாணவியிடம் பெற்றோர் விசாரித்த போது, ஓய்வுபெற்ற ராணுவ வீரரான சேகர் பாலியல் வன்கொடுமை செய்தது தெரிய வந்து. இதனால் அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர், குடியாத்தம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில், மகளிர் போலீசார் சேகர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைதுசெய்தனர். தொடர்ந்து, அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.