மருமகளுடன் கள்ளத்தொடர்பு... கண்டித்தும் கைவிடாத தந்தையை வெட்டிக்கொன்ற மகன்!

 
murder

பெரம்பலூர் அருகே மனைவியுடன் தகாத உறவில் இருந்த தந்தையை, மகன் வெட்டிக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பெரம்பலூர் மாவட்டம் எலந்தைபட்டி கிராமத்தை சேர்ந்தவர் முருகன்(50). இவர் அதே பகுதியில் இரும்பு பட்டறை நடத்தி வருகிறார். இவரது முதல் மனைவி தையல்நாயகி. இவர்களுக்கு வேலவன்(21) உள்ளிட்ட 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில், கூலி தொழிலாளி ஆன வேலவனுக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருச்சி மாவட்டம் பெருவளநல்லுரை சேர்ந்த மீனா(18) என்பவருடன் திருமணம் நடைபெற்றது. 

perambalur

இந்த நிலையில், முருகனுக்கும், அவரது மருமகள் மீனாவுக்கும் இடையே தகாத உறவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனை அறிந்த வேலவன், மனைவி மற்றும் தந்தையை கண்டித்துள்ளார். எனினும் அவர்கள் உறவை தொடர்ந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த வேலவன், நேற்று குடித்துவிட்டு மதுபோதையில் வீட்டிற்கு சென்று மனைவி மீனாவிடம் தகராறில் ஈடுபட்டு அவரை தாக்கி உள்ளார். அப்போது, மீனாவை அடிக்க எதிர்ப்பு தெரிவித்து தந்தை முருகன், வேலவனை கண்டித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த வேலவன் அரிவாளால் முருகனை சரமாரியாக வெட்டினார். இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்த பாடாலூர் போலீசார், முருகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, கொலையாளி வேலவனை கைது செய்தனர்.