மதுஅருந்த பணம் கேட்டு தகராறு செய்த மகன்... ஆத்திரத்தில் குத்திக்கொன்ற தந்தை!

 
trichy murder

திருச்சியில் மது அருந்த பணம் கேட்டு தகராறு செய்த மகனை, தந்தை கத்தியால் குத்திக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி செந்தணிர்புர வ.உ.சி தெருவில் வசித்து வருபவர் அற்புதராஜ். தொழிலாளி. இவரது மகன் அப்பு என்கிற வில்சன் ஆண்ட்ரூஸ்(33). மதுப்பழக்கத்துக்கு அடிமையான அப்பு, வேலைக்கு செல்லாமல் நாள்தோறும் குடித்து விட்டு தந்தையுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். மேலும், இவர் மீது காவல் நிலையத்தில் வழிப்பறி வழக்குகளும் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில், நேற்று வழக்கம்போல் மதுபோதையில் வீட்டிற்கு வந்த அப்பு, தந்தை அற்புதத்திடம் குடிக்க பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். பின்னர், அவர் தூங்க சென்றுள்ளார். 

murder

இதனிடையே மகன் நாள்தோறும் குடித்து விட்டு வந்து தகராறு செய்வதால் ஆத்திரமடைந்த அற்புதராஜ், அவரை கொலை முடிவெடுத்தார். இதனை அடுத்து, வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த அப்புவின் கை, கால்களை கட்டிப்போட்ட அற்புதராஜ், அவரது கழுத்தை துணியால் இறுக்கி கொல்ல முயற்சித்தார். எனினும் உப்பு உயிரிழக்காததால் அவரது கழுத்தில் கத்தியால் சரமாரியாக குத்திக் கொன்றார். தகவல் அறிந்த பாலக்கரை போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

மேலும், இந்த சம்பவம் குறித்து புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து,கொலையாளி அற்புதராஜை கைது செய்தனர். நாள்தோறும் குடித்துவிட்டு வந்த தகராறு செய்த மகனை தந்தை கத்தியால் குத்தி படுகொலை செய்த சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.