விருதுநகரில் சிறப்பு சார்பு ஆய்வாளர் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை!

 
ssi

விருதுநகரில் குடிமைப்பொருள் வழங்கல் பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விருதுநகர் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறையில் சிறப்பு சார்பு ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி பானுமதி (45). இவர் சிவகாசி டவுன் காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். கணவன் - மனைவி இடையே குடும்ப தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று காலை, ராதாகிருஷ்ணன் வழக்கம்போல பணிக்குச் சென்ற நிலையில், நேற்று இரவு 10 மணியளவில், மாவட்ட விளையாட்டு அரங்கம் அருகே தண்வாள பகுதியில் நெல்லையில் இருந்து சென்னை செல்லும் விரைவு ரயில் முன்பு குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

dead

இதில் அவர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தார்.  தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்ற ரயில்வே போலீசார், தண்டவாளத்தில் சிதறி கிடந்த உடல் பாகங்களை மீட்டு, விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். உயிரிழந்த நபரின் சட்டைப்பையில் இருந்த அடையாள அட்டை ஆவணங்களை பார்த்து விசாரித்த போது, தற்கொலை செய்து கொண்டது சிறப்பு சார்பு ஆய்வாளர் ராதாகிருஷ்ணன் என்பது தெரிய வந்தது.

அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து தெரியவில்லை. விபத்து நடந்த பகுதி, தூத்துக்குடி ரயில்வே காவல்நிலைய பகுதிக்கு உட்பட்டது என்பதால், இந்த சம்பவம் குறித்து தூத்துக்குடி ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.