சிவகங்கை அருகே இருசக்கர வாகனம் மீது அரசுப்பேருந்து மோதல்; இருவர் பலி!

 
accident

சிவகங்கை அருகே இருசக்கர வாகனம் மீது அரசுப்பேருந்து மோதிய விபத்தில் 2 இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

சிவகங்கை மாவட்டம் ஆவாரங்காடு கிராமத்தை சேர்ந்தவர் நாச்சியப்பன். இவரது மகன் அரவிந்த பாரதி (18). இவரது நண்பர்கள் வேலாங்குளத்தை சேர்ந்த ராஜேஸ்வரன், வானகருப்பை சேர்ந்த முருகானந்தம். இவர்கள் மூவரும் நேற்று திருப்பத்தூரில் நடந்த மருது பாண்டியர் குருபூஜை நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக இருசக்கர வாகனத்தில் புறப்பட்டு சென்றனர்.

sivagangai

ஒக்கூர் அருகே சென்றபோது அரவிந்த பாரதியின் வாகனத்தின் மீது எதிரே வந்த அரசுப் பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானது. இதில், பலத்த காயமடைந்த அரவிந்த பாரதி, முருகானந்தம் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். ராஜேஸ்வரன் படுகாயம் அடைந்தார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்த மதகுப்பட்டி போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து மதகுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.