திருமணமான 2 மாதத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை... ஆர்டிஓ விசாரணை

 
suicide

தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே திருமணமான 2 மாதத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தஞ்சை மாவட்டம் பேராவூரணியை அடுத்த இந்திரா நகரை சேர்ந்தவர் சேர்ந்தவர் நிரஞ்சனா(25). இவருக்கும், பொன்காட்டை சேர்ந்த நிஷாந்துக்கும்(30) கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த நிலையில், புதுமண தம்பதியினர் இருவரும் நிரஞ்சனாவின் வீட்டில் தலை தீபாவளி கொண்டாடிவிட்டு அன்று இரவு பொன்காட்டில் உள்ள தங்களது வீட்டிற்கு வந்துள்ளனர். அப்போது, நண்பர்களை பார்க்க செல்வதாக கூறிவிட்டு சென்ற நிஷாந்த் இரவு நீண்ட நேரமாகி வீட்டிற்கு திரும்பி உள்ளார்.

thanjavur

இதனை நிரஞ்சனா கண்டித்ததால் கணவன் - மனைவி இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து, நிஷாந்த் நேற்று காலை வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது, வீட்டில் இருந்த நிரஞ்சனா மாயமாகி உள்ளார். இதனால் சந்தேகமடைந்த நிஷாந்த் அருகில் உள்ள மற்றொரு வீட்டிற்கு சென்று பார்த்துள்ளார். அப்போது, நிரஞ்சனா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் சடலமாக தொங்கினார். இதுகுறித்து தகவல் அறிந்த நிரஞ்சனாவின் குடும்பத்தினர் அவரது மரணத்தில் மர்மம் உள்ளதாக கூறி பேராவூரணி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அதன் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே திருமணமான 2 மாதத்தில் புதுமணப் பெண் உயிரிழந்ததால் இந்த சம்பவம் குறித்து வருவாய் கோட்டாட்சியர் விசாரணை மேற்கொண்டு வருகிறர்.