ராமேஸ்வரம் தனியார் விடுதியில் இளம்பெண் கொலை...வடமாநில இளைஞருக்கு போலீஸ் வலை

 
murder

ராமேஸ்வரம் தனியார் விடுதியில் இளம்பெண்ணை கொலை செய்து விட்டு நகையை திருடிக் கொண்டு தப்பியோடிய வடமாநில இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர்.

ராமேஸ்வரம் மேலவாசல் பகுதியில் தனியாருக்கு சொந்தமான தங்கும் விடுதி செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த 23ஆம் தேதி ஹரியானாவை சேர்ந்த யோகேஷ் என்ற இளைஞர் 25 வயது மதிக்கத்தக்க இளம்பெண்ணுடன் அறை எடுத்து தங்கி உள்ளார்.தொடர்ந்து, கடந்த 24ஆம் தேதி அறையை பூட்டிவிட்டு வெளியே சென்ற நிலையில்,  மீண்டும் அறைக்கதவு திறக்காமல் இருந்துள்ளது.

ramanathapuram

இதனால் சந்தேகமடைந்த விடுதி ஊழியர்கள் ராமேஸ்வரம் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அறைக்கதவை உடைத்துச் சென்று உள்ளே பார்த்தனர். அப்போது, இளம்பெண்  கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்தார். இதனை  தொடர்ந்து, உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராமேஸ்வரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில், யோகேஷ் இளம்பெண்ணை கொலை செய்து, அவரது நகைகளை திருடி அடகு வைத்துவிட்டு தப்பிச்சென்றது தெரியவந்தது. இதனை அடுத்து, தப்பியோடிய யோகேஷை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.