பேத்திக்கு பாலியல் தொல்லை அளித்த தாத்தா போக்சோ சட்டத்தில் கைது!

 
rape

கன்னியாகுமரி அருகே 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த 65 வயது தாத்தாவை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே உள்ள பொன்மனை பகுதியை சேர்ந்தவர் இளம்பெண். இவரது 8 வயது மகள் அங்குள்ள பள்ளி ஒன்றில் 3ஆம் வகுப்பு படித்து வருகிறார். அதே பகுதியில் இளம் பெண்ணின் பெற்றோரும் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் இளம்பெண்ணின் வீட்டிற்கு, அவரது 65 வயது தந்தை வந்துள்ளார். அன்றிரவு தனது பேத்தியுடன் தூங்கியுள்ளார். இந்த நிலையில், நள்ளிரவில் சிறுமி திடீரென கூச்சலிட்டார். இதனால் இளம்பெண் அங்கு சென்று பார்த்தபோது, முதியவர் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தது தெரியவந்தது.இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண், இது குறித்து மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

arrest

அதன் பேரில், போலீசார் மேற்கொண்ட விசாரணையில் சிறுமி, தனது தாத்தாவின் வீட்டிற்கு சென்றபோது முதியவர் அவருக்கு பாலியல் தொல்லை அளித்து வந்ததும், இதனை வெளியே கூறக்கூடாது என மிரட்டியதும் தெரிய வந்தது. இதனை அடுத்து போலீசார் முதியவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர். 8 வயது சிறுமிக்கு தாத்தாவே பாலியல் தொல்லை அளித்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.