திண்டிவனம் அருகே கூரியர் வேனில் வெளிமாநில மதுபாட்டிகள் கடத்திவந்த இருவர் கைது!

 
vpm

புதுச்சேரியில் இருந்து திண்டிவனத்துக்கு கூரியர் வேனில் மதுபாட்டிகளை கடத்திவந்த 2 நபர்களை கைதுசெய்த மதுவிலக்குப்பிரிவு போலீசார், அவர்களிடமிருந்து 478 மதுபாட்டிகள் மற்றும் வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் ஆய்வாளர் இளவழகி தலைமையிலான போலீசார் நேற்று திண்டிவனம் அடுத்த ஐ.மேடு பகுதியில் திண்டிவனம் -புதுச்சேரி சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, புதுச்சேரியில் இருந்து வந்த கூரியர் வாகனத்தை சந்தேகத்தின் பேரில் மதுவிலக்குப்பிரிவு போலீசார் மறித்து சோதனையிட்டனர். அப்போது, கூரியர் வாகனத்தில் இருந்த அட்டை பெட்டிகளில் ஏராளமான புதுச்சேரி மது பாட்டில்களை மறைத்து கடத்திச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. 

arrest

இதனை அடுத்து,  478 மது பாட்டில்களையும், கடத்தலுக்கு பயன்படுத்திய கூரியர் வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், மதுபாட்டில்களை கடத்தியது தொடர்பாக புதுச்சேரி குமாரகுருபள்ளத்தை சேர்ந்த அருளாந்து(50) மற்றும் திலகர் நகரை சேர்ந்த செந்தில்குமார் ஆகியோர் மீது திண்டிவனம் மதுவிலக்குப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, இருவரையும் கைது செய்தனர். தொடர்ந்து அவர்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.