சாத்தூர் அருகே சாலை விபத்தில் இருவர் பலி!

 
accident

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே சாலையை கடக்க முயன்ற முதியவர் மீது இருசக்கர வாகனம் மோதியதில் இருவர் உயிரிழந்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்தவர் ஜெயகுமார். இவர் அதே பகுதியை சேர்ந்த மெல்வின் என்பவருடன் தனது இருசக்கர வாகனத்தில் சாத்தூர் 4 வழிச்சாலையில் சென்று கொண்டிருந்தார். சாத்தூர் அருகே உள்ள சின்ன ஓடைப்பட்டி பகுதியில் சென்றபோது, அந்த பகுதியில் சாலையை கடக்க முயன்ற சண்முகையா என்பவர் மீது ஜெயக்குமாரின் வாகனம் மோதியது. இந்த விபத்தில் வாகனத்தை ஓட்டிவந்த ஜெயகுமார் மற்றும் சின்ன ஓடைப்பட்டியை சேர்ந்த சண்முகையா(74) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

dead body

மேலும், மெல்வின் பலத்த காயமடைந்தார். அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்த சாத்தூர் தாலுகா போலீசார், உயிரிழந்த இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், இந்த விபத்து குறித்து புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.