இருசக்கர வாகனம் மீது வேன் மோதல்; தந்தை, மகன் பலி

 
accident

தேனி அருகே இருசக்கர வாகனம் மீது சரக்கு வேன் மோதிய விபத்தில் தந்தை - மகன் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அடுத்த அனுமந்தப்பட்டி பகுதியை சேர்ந்தவர் மணி(26). இவரது மனைவி கௌசல்யா(23). இவர்களுக்கு 3 வயதில் விபூஷன்(3) என்ற மகன் உள்ளனர். மணி, குடும்பத்துடன் திருப்பூரில் தங்கி பணிபுரிந்து வந்தார். தீபாவளியை ஒட்டி நேற்று மனைவி மற்றும் குழந்தையுடன் இருசக்கர வாகனத்தில் தேனிக்கு வந்து கொண்டார்.

theni

குமுளி - திண்டுக்கல் சாலையில் பூதிப்புரம் அருகே சென்றபோது மணி சாலையில டிராக்டரை மறித்து வழி கேட்டுள்ளார். அப்போது, கரூரில் இருந்து கம்பம் நோக்கி சென்ற வேன், மணியின் வாகனத்தின் மீது மோதி விபத்திற்குள்ளானது. இதில், வாகனத்தில் இருந்து தூக்கிவீசப்பட்ட மணி, விபூஷன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும்,கௌசல்யா பலத்த காயமடைந்தார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு தேனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

தகவல் அறிந்த தேனி பழனிசெட்டிப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்த மணி, விபூஷன் ஆகியோரது உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து பழனிசெட்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து வேன் ஓட்டுநரிடம் விசாரித்து வருகின்றனர்.