காளையார்கோவில் அருகே குடும்ப தகராறில் பெண் அடித்துக்கொலை - கணவர் வெறிச்செயல்!

 
murder

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே குடும்ப தகராறில் மனைவியை அடித்துக் கொன்ற கணவர், காவல் நிலையத்தில் சரணடைந்தார். 

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே உள்ள முடிக்கரையை சேர்ந்தவர் வீராசாமி. தொழிலாளி. இவரது மனைவி அன்னலெட்சுமி(32). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அன்னலெட்சுமி, அதே பகுதியை இளைஞருடன் வீட்டை விட்டு ஓடியுள்ளார். இதனை அடுத்து, வீராசாமி, பிள்ளைகளுடன் கோவிலாம்பட்டியில் உள்ள தனது மாமனார் அழகப்பன் வீட்டில் வசித்து வந்தார்.

sivagangai

இந்த நிலையில், நேற்று அன்னலெட்சுமி, தனது தந்தையின் வீட்டிற்கு வந்து செலவுக்கு பணம் கேட்டுள்ளார். அப்போது, வீரசாமிக்கும், அன்னலட்சுமிக்கும் இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. இதில், ஆத்திரமடைந்த வீராசாமி, மண்வெட்டியால் அன்னதாயியை தாக்கினார். இதில் பலத்த காயமடைந்த அன்னதாயி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனை அடுத்து, வீராசாமி மண்வெட்டியுடன் திருவேகம்பத்தூர் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

அவர் அளித்த தகவலின் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குடும்ப தகராறில் பெண் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.