கடையில் பங்குதாரராக சேர்க்க மறுத்த அக்கா மகன் குத்திக்கொலை - தொழிலாளி கைது!

 
Murder

கூல் கடையில் தன்னை உரிமையாளராக சேர்க்க மறுத்த அக்காள் மகனை கத்தியால் குத்திக்கொன்ற தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் கோமதிபுரம் 1-வது தெருவை சேர்ந்தவர் அருணாச்சலம். இவரது மனைவி முத்துமாரி.  இவர்களுக்கு வைரமுத்து (29), தங்கமுத்து (27) என்ற 2 மகன்கள் உள்ளனர். கணவர் உயிரிழந்த நிலையில் முத்துமாரி, தனது மகன்களுடன் அதே பகுதியில் கூல் கடை நடத்தி வந்தார். மேலும், தனக்கு உதவியாக, செங்கோட்டையை  சேர்ந்த தனது தம்பி அன்பழகன் என்பரை கடையில் உதவிக்கு வைத்திருந்துள்ளார். 

arrested

இந்த நிலையில், அன்பழகன் கடையில் தன்னையும் ஒரு பங்குதாரராக சேர்க்கும்படி கேட்டு வந்துள்ளார். ஆனால், முத்துமாரியும், அவரது மகன்களும் மறுத்து விட்டனர். நேற்று முன்தினம் இரவு ராமசாமியாபுரம் பகுதியில் வைரமுத்து நின்று பேசிக் கொண்டிருந்துள்ளார். அப்போது, அங்கு சென்ற மாமா அன்பழகன், அவரிடம் கடையில் பங்குதாரராக சேர்க்க கோரி தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரமடைந்த அன்பழகன், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் வைரமுத்துவை சரமாரியாக குத்தினார். இதில் பலத்த காயமடைந்த வைரமுத்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்த சங்கரன்கோவில் டவுன் போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து தங்கமுத்து அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து அன்பழகன் மற்றும் அவரது நண்பர் நாராயணன் ஆகியோரை கைது செய்தனர்.