திண்டுக்கல் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் தொழிலாளிக்கு 7 ஆண்டுகள் சிறை!

 
dgl dgl

திண்டுக்கல்லில் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த கூலி தொழிலாளிக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் ரூ.11 ஆயிரம் அபராதம் விதித்து மாவட்ட மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 

திண்டுக்கல் சோலைகால், நெட்டு தெருவை சேர்ந்தவர் சிவச்சந்திரன் (43). கூலி தொழிலாளி. இவர் கடந்த 2021ஆம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில், போலீசார் சிவச்சந்திரன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

judgement

இந்த வழக்கு திண்டுக்கல் விரைவு மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கின் இறுதி விசாரணை நேற்று நிறைவடைந்தது. இதனை அடுத்து, வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி ஜி.சரண், குற்றவாளி சிவசந்திரனுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.11 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.