திருமணமான 11 மாதத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை... அரியலூர் அருகே சோகம்!

 
ariyalur

அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே திருமணமான 11 மாதத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

திருவாரூர் மாவட்டம் வேலூர் நத்தம் பகுதியை சேர்ந்தவர் பரமசிவம். இவரது மகள் கற்பக லட்சுமி(24). இவருக்கும், அரியலூர் மாவட்டம் அழகியமணவாளன் கிராமத்தை சேர்ந்த உறவினர் இளவரசன் என்பவருக்கும் கடந்த 11 மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது.  இவர்களுக்கு ஒன்றரை மாத பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில், நேற்று வீட்டில் இருந்தவர்கள் வெளியே புறப்பட்டு சென்ற நிலையில், கற்பக லட்சுமி தனியாக இருந்துள்ளார். அப்போது, திடீரென அவர் சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை கண்ட உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். 

ariyalur

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தூத்தூர் போலீசார், கற்பக லட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து கற்பகலட்சுமியின் உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். மேலும், திருமணமான 11 மாதத்தில் கற்பக லட்சுமி தற்கொலை செய்து கொண்டதால் இந்த சம்பவம் குறித்து வருவாய் கோட்டாட்சியர் விசாரித்து வருகிறார்.